மடுல்சீமை ஊரடா
மாதாவின் பிறப்பிடமடா
மஹாதோவ குரூப்படா
மகிழ்ச்சி கொள்வது சிறப்படா
புகுந்த ஊரு புகழுதடா
பிறந்த ஊரு பெருமை கொள்ளுதடா
நாள் முழுவதும் சீதமடா
நன்றாக மக்கள் வாழ்கிறார்களாடா
காளி கோயில் வீதியடா
கருணை தேவியின் இல்லமடா
சிறு வயதில் சென்று இருந்தேனடா
சித்தியின் அறவனைப்பில் வாழ்ந்தேனடா
தாத்தாவின் நாமத்துக்கு தனி இடமடா
தக்க வைக்கிறார்கள் தமயனடா
சித்திக்கு தேநீர் கொண்டு சென்றேனடா
சிறுதுண்டு ரொட்டியை பகிர்ந்து உண்பாலடா
மறக்க முடியாத மடுல்சீமையூரடா
மதிப்பு மரியாதைக்குரிய ஊரடா
மடுல்சீமை சதாசிவமடா
கவி உறவுகளின் பிதாமகனடா
அமுனுதோவ டிவிசனடா
அன்பு அம்மாவின் அடித்தளமடா
மடுல்சீமையூர் செழிக்கனுமடா
மகிழ்ச்சியில் மாந்தர் வாழனுமடா
0 comments:
Post a Comment