உயிரே பிரியாதே


உயிரே பிரியாதே

என் மூச்சே நீதானே
கற்பை சூரையாட
கயவனுக்கு தெரியும்
உன் கற்பை சுமக்க
எனக்கு மட்டுமே முடியும்
தென்றல் வீசும்போது
தீண்டிட வந்தாய்
தேனை பருகும்போது
ஔடதமாய் புகுந்தாய்
பிணிக்குறை தீர்க்க நீ
பிம்பமாய் நின்றாய்
பேரின்ப தருவதற்காய்
மேனியிலே படர்ந்தாய்
பிரியாதே செல்லமே
பித்துப் பிடிக்குது நித்தமே
ஒன்றாய் நாம் வாழ
ஓடி வா ரதியே

தனிமரம்



ஆசைக்கொன்று அஸ்திக்கொன்றென
அடிமனதில் பதியமிட்டு
பூமியில் பிறந்த புத்திரர்களே நாங்கள்
கல்வியை கரிசனையோடு தொடர
கலையுணர்வோடு நிதமும் பயில
அப்பா பட்டப் பாடுகளை
அடுக்கி அடுக்கி இயம்புகிறேன் தேனு

பள்ளிக் காலமும் ஓடியொழிய
துள்ளி திரிந்தோம் துயரம் அகல
தொழிலும் கூடவே தொடர்ந்து வந்து
தும்பிப்பூச்சாய் பறந்ததுவே

வைகறையில் தானெழும்பி
வாசல் பக்கம் நடந்தார் தந்தை
வீட்டுக்குள்ளே வந்த மகான்
நின்று வீரிட்டு கத்தினாரே

அலரல் சத்தம் காதுக்குள் புக
அலட்டி போட்டு எழுந்தோம் உடனே
அமத்துவம் அடைந்தார் அப்பா
தனிமரமாய் நின்றேன் தரிகெட்டு பாப்பா

தமக்கையின் வாழ்வோ
தம்பியின் கையில்
தனியாய் நின்று உழைத்தேன் பையில்
தன்னலம் மறந்து தன்னில்லம் காத்தேன்
தைரிய மகனாய் தரணியில் வாழ்ந்தேன்

மணமகன் ஒருவரை தேடிப் பிடித்து
தமக்கையின் கையில் ஒப்படைத்து
வாழ்க்கையெனும் சோலைக்குள்ளே
வசந்தக்காற்றை வீசச் செய்தேன்

நிலவில் ஓர் நாள்

தூய்மையான இதயங் கொண்டு
வாய்மையான பயணம் சிறந்து
வாழப் பிறந்த வாரிசு வரிசையில்
வழுக்கி விழுந்தனரே பலர்
இன்பமும் துன்பமும் இரண்டர கலந்து
இதமாக மெதுவாய் இதயத்திற்குள் புகுந்து
வாழ்க்கையின் தத்துவம் இயம்ப
வாதையுடன் நாளும் தேய்ந்ததுவே
சீதமான காற்றும் வீச
சில்லரையான வார்த்தைகளும் பேச
அமாவாசை தினத்தன்று
அர்த்தங்கள் பல புகட்டியதே
காதலித்த காதலர் சோடிகள்
களிப்புடன் சென்றனரே திங்களருகில்
ஒளியியை நேசிக்கும் உருவங்களே
ஓர் நாள் தேயும் பருவங்களே
வளரும் போது வாடாத அரும்பாய்
தேயும்போது தெம்புடன் எழுந்தாய்
நிலையற்ற வாழ்வின் நிலையாமையை
நிலவில் ஓர் நாள் கற்றுணர்ந்தேன்
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

நள்ளிரவு நந்தவனம்



மண்ணுலகிலே இருக்கிறதுவே
வடிவடிவான நந்தவனங்கள்
விண்ணுலகிலே இருப்பதுவோ
வேடிக்கையான நந்தவனம்
பற்பல மலர்களையெல்லாம்
பாரினிலே பார்த்ததுண்டு
பகலிரவாய் ரசித்ததுமுண்டு
எத்தனை முறை ஆசைப்பட்டாலும்
இரவில் மட்டுமே இன்பமுண்டு
இலவசமாய் பார்ப்பதாலன்று

இருபத்தேழு வகையான மலர்களெல்லாம்
இருட்டிலே மின்னுவதுண்டு
இடையிடையே மழைப் பொழிந்தால்
எப்படி ரசிப்பது கன்று
பூந்தோட்டம் காவல் காக்க
பூரிப்போடு வருகின்ற நிலவே
பூரணை தினத்தன்று
பொக்கிசமாய் நிற்பாளன்று
திங்களிலே திங்களுக்கு விடுமுறையுண்டு
திருடப்பார்க்குதே தேவதைகள் புகுந்து
பார்க்க பார்க்க திகட்டாத
பால் வண்ண பாசமலர்களே
படித்தவனும் பாமரனும்
பான்மையுடன் ரசிக்கும்
நந்தவனமே
நீலநிற பின்னனி கொடுத்து
நள்ளிரவில் மலரும் நந்தவனமே
இயற்கை நந்தவனம் தானமைத்து
இரவையும் சீதமாக்கி தந்த நந்தவனமே
எப்போதும் நாங்கள் உனது சொந்தமே

சொன்ன சொல் என்னாச்சி

சொன்ன சொல் என்னாச்சி
சூறாவளியில் உடைந்த வீடாச்சி
மனதார சொன்ன வாசகமோ
மாருதத்திலே உரசி போயாச்சி


ஒற்றையடிப் பாதையில
ஒன்றாய் இரண்டற கலக்கையில
உண்மைய சொல்லி வாராளென்று
ஊதாரியா யானும் உருகினேனே

சித்தத்திற்குள்ளே கலந்த சித்தம்
சிறைப்பட்டு கிடந்ததே நித்தம்
பெண்ணியம் போற்றிய பிதாவுக்கு
சூசகம் செய்த ராட்சசியே

அன்பையே யான் அடைக்களம் செய்தேன்
வம்பையே நீயோ இன்று வாரியணைத்தாய்
பண்பையே பாரிலே போட்டுடைத்த பாவியே
வீண்த்தெம்பை நீ வீட்டிலே விற்றதேனடி

நம்பியதற்கு விதைத்த நாற்றுமேடையா
நாயகனை ஏமாற்றிய நடைபாதையா
தன்னம்பிக்கையோ தனக்கிருக்கு
தலைகீழாக கலாச்சாரம் மாறியிருக்கு

தாலியை கட்டியதும் தாம்பத்தியம்
வேலியை உடைப்பதில் வீரசோழியம்
வேதனையான விண்ணப்பம் இன்று
சோதிடம் சொல்லியே சுட்டதிங்கே

சொன்னதை மறப்பது சுலபம் உனக்கு
எண்ணியதை இழந்தது எனது மக்கு
காலம் சொல்வதோ தெரியாதுனக்கு
கோலமாய் நிற்கையில் புரியுமுனக்கு