குயிலின் நாதம் கும்மிருட்டை கலைக்க/
வயலின் ஓரம் வான்மதியும் கடக்க/
தையலின் உணர்வில் தைத்த மனதோ/
வைகறை பொழுதில் வசியம் செய்ததே/
கதிரவனின் வருகை காதலை அலங்கரிக்க/
கற்பகச் சோலை ஊடலை தடம்பதிக்க/
மௌனமொழி பேசும் மன்மத பொழுதில்/
மங்கல கீதம் பாடும் நேரமிது/
இன்பத்தில் எல்லை இரண்டற கலக்க/
இல்லாளின் சொல்லை இன்புற கேட்க/
இதயத்தின் இன்னிசை இனிதே ஒலிக்க/
இளமையின் அகவை கரையும் கணப்பொழுது/
பறவைகள் ஒலியும் பரவையின் அலையும்/
பாசத்தின் பிணைப்பை படமோ பிடிக்கும்/
பான்மையின் வரவும் பழகிய இரவும்/
வாலிபக் கனவே வைகறை இன்பம்/