பார்க்காமல் வந்த காதல்

காதல் தேவதையை காணலடி

களிப்போ மனதுக்கு இல்லையடி
பார்க்காமல் வந்த காதலடி 
பரவசமாய் இப்போ இருக்குதடி
உருவங்கள் காணாத காதலடி
உள்ளங்கள் இணைந்தது உண்மையடி
காணத் தவித்தது கண்கலடி
கவிதையாய் நான் சொன்னேனடி
சிறப்புடன் வாழ எண்ணியடி
செங்கலடியில் கரம் பிடித்தேனடி
ஆண் மகனை பெற்றுத் தந்தாயடி
ஆசையில் அகம் மகிழுதடி
பெண் குஞ்சி நம் பொன் குஞ்சியடி
என் குஞ்சு என்று இதயம் மகிழுதடி


0 comments:

Post a Comment