பூக்கள் விடும் தூது

 மேகத்தை தூது விட்டேன்
மெத்தையாய் படுத்துறங்க
பறவையை தூது விட்டேன்
உறவை நிதம் நீடித்திட
சந்தனத்தை தூது விட்டேன்
மேனிதனை குளிர்விக்க
எத்தனை எத்தனையோ தூதுவிட்டேன்
இன்பம் காண முடியலையே
வாசம் கொண்ட மலர்களையெல்லாம்
வண்ண வண்ணமாய் தூதுவிட்டேன்
மல்லிகை பூ சொன்னதுவே
கார்குழலின் நறுமணத்தை
வாடா மல்லி இயம்பியதே
வாடா மலரின் வதனம்தனை
கனகாம்பரம் செப்பியதே
கல்யாணம் செய்ய பொருத்தமானவளென்று
அல்லி மலர் கூறியதே
அயராது விழித்து வேலை செய்வாளென்று
தாமரை பூவும் சொன்னதுவே
தானாகவே காலையிலே விழிப்பாளென்று
சூரியகாந்திப்பூ சொன்னதுவே
தூய மனம் உடையவளென்று
காதல் ரோஜாவை தூதுவிட்டேன்
கணப்போழுதில் தாலியை கட்டென்றதுவே

0 comments:

Post a Comment