ஹைக்கூ


நிலாமுற்றம் கவியரங்கம்

https://m.facebook.com/groups/1695984020630329?view=permalink&id=2610247919203930

ஹைக்கூ


ஹைக்கூ


நிலாமுற்ற கவியரங்கம்-198





















தமிழ் வணக்கம்
*****************முத்தமிழ் சித்திரமே
முழங்கிடும் வெண்சங்கே
சித்திரப் புதுத் தேரே
சிந்தனையின் கனிச்சுடரே
எத்திக்கும் ஒலித்திடுமே
இன்பமழை பொழிந்திடுமே
அன்னைத்தமிழ் உந்தனையே
அடியேனும் மகிழ்வாய் வணங்குகின்றேன்

தலைமை வணக்கம்
****************************
தமிழின் சுவை அறிந்தவரே
தனித்துவ திறனால் மிளிர்பவரே
இருவரி பாடிய வள்ளுவரே
இருந்தால் திகைக்க செய்பவரே
தீந்தமிழ் அழகில் கலந்தவரே
திடமாய் நயமாய் கவியுரைப்பவரே
அன்பால் ஈர்த்த அருந்தமிழே
பண்பால் சேரந்த பாவலரே
உந்தனுக்கு எந்தன் எண்ணத்தாலே
ஒரு கோடி வந்தனம் செப்புகிறேனையா

அவை வணக்கம்
***********************
அவைதனிலே வீற்றிருக்கும்
அன்புத்தமிழ் உறவுகளே
கன்னல் மொழி சுவைத்திடவே
காத்திருக்கும் பெரியோரே
விழிகளுக்கும் செவிகளுக்கும்
விருந்துபடைக்கும் கவியோரே
அத்தனை செம்மொழி உயிர்களுக்கும்
அடியேனின் கோடி வந்தனங்கள்

கவிதைக்கு தேவை
சொல்நயம்
****************
சொல்லின் பொருளை சூட்சுமாய் பாடிடவே
சுந்தரத் தமிழும் இனிதாய் கலந்திடவே
எண்ண ஓலையில் இன்பம் பரப்பிடவே
வண்ண மலர்களே வாயுரைக்கும் சொல்லாகும்

மாந்தரின் மனமோ நாளும் மகிழ்திடவே
மந்திரச் சொல்லால் சந்தமும் முழங்கிடவே
தூவிய வார்த்தைகளோ துள்ளிசை பாடிடவே
ஆழமாய் பதிந்த ஆணிவேராய் ஆகிடுமே

அன்று முதல் இன்று வரை
ஆன்றோர் உரைத்த நம் மொழியில்
பாலும் தேனும் கலந்தாற் போல
பாவலர் சொல்லாய் பவனி வருகுதிங்கே

சொல்லின் நயமே சிறப்பு என்போம்
சொல்லவே விளங்கும் இதுதானென்போம்
தெள்ளுத் தமிழிலால் கவி பாடிடுவோம்
செம்மொழிப் பலனை உலகில் உணர்த்திடுவோம்

கவிமழை யான் பொழிய
களமமைத்த நிறுவுனரே
தனித்தழிலால் கவிபாடும்
தார்மீக தலைமையாரே
பாவினிலே நானுரைத்த
கவிப் பாகுதனை சுவைத்தோரே அவையோரே
அனைவருக்கும் அன்புத்தமிழின் நன்றியையா
அடுத்த வாரம் மீண்டும் சங்கமிப்போமையா
ஆண்டவனும் அருள்மழை பொழிவாரையா
நன்றி வணக்கம்

ஹைக்கூ

கிராமிய பூசையில்/
விபூதி தரித்து நிற்கிறது/
பலி கொடுக்கப்படும் கடா/


அம்மை நோயால்/
அவதிப்பட்டு கிடக்கிறது/
தேயிலைச் செடி/

வீசிய காற்றில்/
மெதுவாக தொட்டுச் செல்கிறது/
திடீரென வந்தச் சாரல்/
 


மாலைநேர வேலையில்/
மனதை வெகுவாக கவர்கிறது/
வளைந்திருந்த வானவில்/


குளிர்கால பயணத்தில்
மேலெழுந்து நிற்கிறது
கையிலுள்ள முடிகள்

சிரித்தாலே இனிக்கும்


குருதியின் குதூகலம்/

குடும்பத்தில் கும்மாளம்/
மகவையின் மாநகரம்/
மங்கலத்தின் நிறைவகம்/
தேனகத்தின் தேனாமிர்தம்/
தெருவெங்கும் ஆரவாரம்/
சின்னவளின் ரீங்காரம்/
சிரித்தாலே இனித்திடும்/

முதற்சொல் கவிதை-கோயில்


கோயில் உணர்த்தும் கோபுர தரிசனமே
குவலய வாழ்வின் குன்றாத செல்வமே
மனதினில் பதிந்த மங்கல கருவறையே
மறுமையிலும் நீயே எந்தன் திருமறையே

ஹைக்கூ

குளிர்கால பயணத்தில்
மேலெழுந்து நிற்கிறது
கையிலுள்ள முடிகள்


உனக்காகப் பூத்திருக்கின்றேன்..



மொட்டில் உறங்கும் தேன் துளியாய்
முகமனுக்கு காத்திருக்கும் விருந்தோம்பலாய்
மார்கழி குளிரின் மன்மத ராகமாய்
மாமனே உன்னை மனதில் பதித்தேனே

கல்யாண வீட்டில் காத்திருக்கும் பாலும்
முதலிடம் பிடிக்கும் முக்கனி ஒன்றும்
எதிர்கால வாழ்வின் தத்துவ நிலையை
இரட்டை அர்த்தமாய் இயம்புதே இங்கே

பிஞ்சிலே மலர்ந்த வஞ்சியாய் நானும்
பேதமை அறியா நெஞ்சிலே நீயும்
தங்கமாய் உதித்த காதல் சுடரே
கட்டிளம் பாடும் கானம் கேட்கலையோ

பூவை மொய்க்கும் வண்டினமாய்
தேனைக் குடிக்கும் காவலனாய்
உன்னை நாடும் காரிகையை
திண்ணை தேடி வருவதெப்போ

காலங்களும் ஓடி மறையும்
கண்ணுக்குள்ளே காதல் உறையும்
வாடிப்போகும் முன்னே வந்து
வசந்த காற்றை நுகர்ந்து விடு

எண்ணில்லா வாசனையை
ஈர்க்கும் மலரோ நானல்ல
அனிச்சை மலராய் காத்திருக்கேன்
துணிச்சலாய் நீயும் தூக்கிச்செல்லு


நினைவெல்லாம் நீயே


என் வாழ்க்கைச் சோலையில் மலர்ந்தவளே

இல்லற சுகந்தம் இனிதாய் வீசியவளே
சொந்த உறவில் பந்தமாய் நுழைந்தவளே
சுந்தரக் கிளியே சூசகமாய் உலாவுகிறாயே

கனவிலும் நீதான் நினைவிலும் நீதான்
கந்தனின் வள்ளியாய் காசினியும் நீதான்
உணவிலும் நீதான் உணர்விலும் நீதான்
வாசகமும் நீதான் வசந்தமும் நீதான்

உயிரின் காதலாய் ஊடுருவும் தேவதையே
தயிரின் வாசமாய் தாகம் தனித்தாயே
உந்தனது நினைவாலே உலாவும் மாருதமாய்
எந்தனது நினைவினிலே எல்லாமே நீதானே

ஹைக்கூ

இறுதிக் காலம்/
பின் தொடர்ந்தே வருகிறது/
மரண பயம்/

இணைத்தின் வாசல்



உடலெல்லாம் இரத்த ஓட்டம்

ஒரு நாளும் பார்க்காத கூட்டம்
எப்போதும் உன்மீது நாட்டம்
இதுவே என் பூந்தோட்டம்

காலத்தின் தேவையிலே
கடுகதியாய்
பிறந்தவனே
உன்னை பார்த்து கற்றதனால்
உலகில் மிளிரும் தங்கம் ஆனேன்

கல்லாருக்கு தெரியாது
கற்பது எப்படி உன்னிடமென்று
நல்லார் உலாவும் பந்தியில்
நானும் முதலிடம் பெற்றேன் அன்பே

கல்விச்சாலை சென்றதுண்டு
கரிசனையோடு கற்றதுமுண்டு
ஏட்டுசுரக்காய் கரிக்கு உதவாதென்று
எத்தனையோ பேர் சொன்னார்கள் அன்று

அத்தனை பேரும் சொன்னதையெல்லாம்
அடிமனதில் பதியமிட்டு
உந்தன் விதையால் பயனடையும்
ஊர்க்குருவி நானன்றோ


தீயவைகளை கண்டு
இங்கே தித்திக்கும்
வாலிப கூட்டம்
நல்லதை கற்றுக்கொள்ள
நல்மனமும் இல்லை இங்கே

வாழ்வுதனின் தத்துவத்தை
வசிய செய்ய ஆசைப்பட்டு
உந்தன் காலடியில் சரணடைந்து
ஓராயிரம் விடயம் கற்றோம் யாமே

பல்கலைக்கழகம் நீதான் எனக்கு
பகுத்தறிவும் கலந்த மிடுக்கு
சிவனின் கிருத்தியமும் கிருபை நமக்கு
கிடைத்ததாலே நல்ல அறிவு பெருக்கு