கோதையரின் கொந்தளிப்பு


கொழுந்தை பறிக்குது கரங்கள்
கொதித்து எழும்புது கோதையரின் மனங்கள்
வதைத்தெடுப்பது உங்களது குணங்கள்
சிதைந்து போவது எங்களது இனங்கள்
நாட்டுக்கு எப்போதும் நல்ல வருமானம்
நோட்டை கொடுக்க ஏன் இத்தனைகாலம்
அட்டைப்பூச்சிக்கு எந்நாளும் ஆனந்தம்
அமைச்சர்களின் அகத்திலே நாளும் ஆரவாரம்
தேயிலை வேர்கள் கூட நாளும் வளரும்
தினந்தோரும் எங்கள் வறுமை ஊஞ்சலாடும்
பச்சையாய் பசேளையோடு தொடரும்பயணம்
பசுமையாய் மிளிர்வது இனி எந்தகாலம்?
இச்சையாய் பார்ப்பது இளைஞனின் சுபாவம்
நிச்சயமாய் ஊதியம் தருவது எந்தகாலம்?