முள்ளிவாய்க்கால் சரீரம்




அகரத்தின் சிகரமான அடையாள நகரமே/

ஆகுலத்தில் கலங்கிய குருதிப் பிரவாகமே/
மறத்தமிழன் வாழ்ந்த மாண்பான இடமே/
மக்கிப்போன எருவில் கக்கிய தடமே/

ஆணவத்தின் பிடியில் சிக்கிய மனமே/
ஆண்டவனும் கண்ணை மூடியக் கணமே/
நாடாள ஆசைப்பட்ட நாயக்க கூட்டமே/
நம்மினத்தை அழித்த சுவடும் இதுவே/

அழிந்துவிட நாங்களென்ன அரைவட்ட நீர்க்குமிழியா/
ஆவேசமாய் எழுந்திடும் அருகம்புல்லடா நாம்/
உடலமெல்லாம் உக்கி உரமாகிப் போனாலும்/
ஒருநாள் எழுவோம் உலகை ஆள/


காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா