ஆதவன் ஒளியால்
அனைத்தும் துளிர்க்கும்/
ஆண்டவன் வழியால்
அற்புதம் நடக்கும்/
பூக்கும் மலர்கள்
புன்னகை சேர்க்கும்/
புத்தம் புதிய
பொழுதும் வாழ்த்தும்/
சித்தம் கவர்ந்த
அத்தனை மலர்களும்/
சிந்திய வாசத்தால்
எண்ணங்களும் மகிழும்/
வாழ்க்கையின் தத்துவமதை
வைகறையில் உணர்த்தும்/
வசந்தகாலமாய் மாறியே
வண்ணத்தமிழாய் மணக்கும்/