ஆடிக்காற்று

ஆடிக்காற்று  வீசுதையா!
ஆள  பிரட்ட   பார்க்குதையா!
தேநீர் தந்த தேயிலையே -இன்று
தேகம் மெலிந்து காயுதையா!
மலையகம் காத்த மாதாவோ -இன்று
மதி மயங்கி நிற்குதையா!
கயவர்களின்  தீய பழக்கத்தால் 
காடே பற்றி எரியுதையா!
நிவாரணம் தரும் நிர்வாகமென்று-மாந்தர்
நிம்மதி முச்சி விடுகிறார்களையா!
ஆடித் திங்களின்  அவலநிலையால்
ஓங்கி  வளருது வாழ்க்கை செலவையா!
ஆடி விழா  தொடங்கியதால்
அதிலே காலம்  கழியுதையா.........!இதிலே
அழகன் முருகனின் அருள் கிடைக்குதையா!

அந்தி நேர வானம்