மாலைவெயிலே மயங்கிடவா
அந்திமாலை நேரத்திலே
சந்திவெளி நடப்பவளே
உந்தனது இடையினிலே
குடம் ஊஞ்சலுந்தான் ஆடுதடி
உன்மேல பாசமெனக்கு
உடம்பெல்லாம் ஒட்டிக்கிடக்கு
நெத்தியில பொட்டு வைக்க
நேரங் குறிப்போம் வாவேடி பொன்னு
வைகாசி மாச திங்களிலே
மையல் பேசும் உன் விழியும்
காந்தமா மெதுவா இழுக்குதடி
கழுத்த நீட்ட வந்திடுடி
சொந்தம் பந்தம் ஒன்னா கூடி
சொகுசா வண்டியிலே ஆடிப்பாடி
பொன்னும் பார்க்க வாறோம் புள்ள
பொறுமையா நீயும் வந்திடு மெல்ல
அந்தநேரம் எல்லாம் கூடி
அம்சமா பேசி மகிழ்ந்திடவே
மாலைப்பொழுது வேளையிலே
மாலையிட நானும் வாறேன்
சோளக்காட்டு பக்கத்திலே
சோலியோட வெட்கத்திலே
வெட்கத்தோட நீயிருக்க
முக்காடு போட நானும் வாறேன்
சோலையிலே தனியா இருந்தா
பாலைவனமா மாறும் மனசு
மூனுமுடிச்சி போட்டாதானே
முடங்கி கிடக்கும் இளவயசு
மாலையிட நான் வரவா
காலையிலே தேன் தரவா
பானையிலே மிதக்கும் பதனிப்போல
பொங்குதடி என் மனசு