உண்மையின் விம்பம்

உங்கள் காதல்தான் உண்மையான
காதல் சூரியகாந்தியே!
ஒரு சில காதல் உண்மையானதாய்
காட்சிதரும்-ஆனால்
ஒரு நொடியில் கானல்நீராய்
தோன்றி மறையும்
நீ-காதலன் எனும் பகலவனின்
முகம் பார்த்து மலர ஏங்கும் தருனம்
மற்ற காதலருக்கு நீ சூட்டும்
படிப்பினை எனும் மகுடம்
ஒருவனுக்கு ஒருத்தியென்பது
ஒவ்வொருவரும் கூறும் வசனம்-ஆனால்
நீயும் அருணும் உணர்த்தும் சுபாவம்
அனைத்து காதலுக்கான பாடம்....................

ரோஜாவை தேடும் ராஜா

                         
          
                           ரோஜா இதழே
                                 ரோஜாவை பார்த்து ஏங்குகிறாள்
                                         கவர்ச்சியழகை கண்டு மகிழ்ச்சியா?
                                 இல்லை -கட்டழகை கண்டு அதிர்ச்சியா?
                                       கற்பை சூறையாடும் காடையர்கள்
                                  உலா வரும் இம்மண்ணிலே-இனிமேல்
                                              நீயும் கவர்ச்சியாய் மலரவேண்டாம்-ரோஜாவே
                                 கயவர் கூட்டம் உன்னையும் கற்பழித்துவிடுவான்
                                        என்ற பீதி சாதி சண்டையாய் உருவெடுக்கும்............
                                  என்ற ஆதங்கம் என்னை உருத்துகிறது


  

காதலின் அடையாளம்



தேய்ந்து வளரும் வெண்ணிலாவே
காய்ந்து போவது ஏன் நிலாவே
காதலர் மனதில் நுழைந்த நிலாவே
கதிரவன் ஒளியை கடன் வாங்கிய நிலாவே
வாழ்க்கையின் தத்துவம் சொன்ன நிலாவே
வயதாகியும் வாலிபனான வண்ணநிலாவே
சீதமான வேளைகளில் நிலாவே
ஞாபகமாய் நீ மலர்வாய் நிலாவே
கடனாய் ஒளியை வாங்கியதாளா நிலாவே
காரிருள் நேரத்தில் வருகிறாய் நிலாவே
இரவல் பெற்ற பொருளை நிலாவே
இனி இம்மையில் தருவாயா நிலாவே
உண்மையை சொல்லு நிலாவே-உன்னை
ஒரு நொடியில் முற்றுகையிடுவான் மேகமே