உலகையே ஆட்டிப் படைக்கும்
உயிர்க்கொல்லியே//
உன்னைப் பிரசவித்த
கருவறையும் தெரியலையே//
அரைமுதல் அம்பலம்வரை
ஆவேச உன்னாட்சி//
அழிவை நோக்கி
பயணிப்பதா உன்முயற்சி//
மண்ணுலகில் வாழ்ந்திடவே
ஆசையுறும் மாந்தர்களை//
கண்களிலே காட்டாதபடி
கண்முன்னே மாய்ப்பதேனோ//
வந்தவழி திரும்பி விடு
வசந்தகாலம் திருப்பிக் கொடு//
உன்பெயரை உச்சரிக்க
உள்ளுணர்வு வெறுக்குதிங்கே//
உடனடியே உலகை மறந்து
ஓடிவிடு பெருபிணியே//
நோகாமலே வெளியேறு நுண்மியே//
நோய்களையெலாம் நொடியில் விரட்டியே//