ஹைக்கூ


ஹைக்கூ

ஒளிரும் விளக்கு
பிரகாசமாய் இருக்கிறது
குழந்தையின் முகம்.

சீரும் சிறப்பும்

என்னுயிரே
இல்லறத்தின் நறுமணமே/
இனிய வாழ்வின் தனியழகே/ எந்தன் பாதியில் நீ கலந்து/
சொந்தம் சுமக்கும் சுந்தர துலாபாரம் நீயடி/





தற்கால அரசியலை தழுவிய ஹைக்கூ சில






1. ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல்/
பாதுகாப்பாகவே இருக்கிறது/
மேடைப்பேச்சி/

2.வாக்கு பதிவு/
குறையாமலே தொடர்கிறது/
சுட்டுவிரல் மை/
3.தேர்தல் பிரசாரம்/
சூடு பிடிக்கிறது/
பொய் வாக்குறுதி/
4.வாக்களிப்பு நிலையம்/
அமைதியாக இருக்கிறது/
கதைக்க முடியாத ஊமை/

5.
உலங்கூர்தி வந்ததும்/
பின்னோக்கி செல்கிறது/
சிறுபராய காலம்/

ஐக்கூ

கொழுந்து கூடைக்குள்/
தேடிக் கொண்டே இருக்கிறார்கள்/ 

வரலாற்று முகவரியை/

உலங்கூர்தி வந்ததும்/ 

பின்னோக்கி செல்கிறது/ 
சிறுபராய காலம்/

உன்னால் ஒரு மயக்கம்


கட்டிளம் பருவத்திலே
காதலை சுமந்தோமே
காதலித்த பின்னாலே
கனவுகளில் கலந்தோமே
பதினைந்து நிமிடத்திலே
பதியமான வாரிசுதனை
பார்த்திடவே நாளும்
தவம் கிடந்தோமே
காதலின் அடையாளமா இது
இல்லறத்தின் வேதமா அது
வசந்தக்காற்று வாசலில்
நின்று கொண்டு
சதா ரனமான வாழ்வுதனை
சாதாரணமாக்க கேட்டதிங்கே
மறுமொழியும் சொல்லாமல்
மயங்கி நின்றேன் உன்னாலே
இத்தனையும் கடந்து
இல்லற மழையில் நனைந்து
இன்ப ஊஞ்சலில் ஆடியபோது
ஒவ்வொன்றாய் நானும் மறந்தேன்

#ஹைக்கூ

#ஹைக்கூ _ஒரு சின்ன அறிமுகம்..
ஹைக்கூ பலரையும் கவரும் எளிய கவிதை வடிவம்.
மூன்று வரிகளில் பல விசயங்களை பல கோணங்களில் வெளிபடுத்தி நகரும் ஆற்றல் கொண்டது ஹைக்கூ.
மூன்று வரிகளில் முதலிரண்டு வரிகள் ஒரு கூறு..ஈற்றடி ஒரு கூறு..கவிஞன் முதலிரண்டு வரிகளில் ஒரு கருத்தினைக் கூற வந்து...வாசகன் எதிர்பாராத ஒரு ஈற்றடியினைத் தந்து கவிதையை நிறைவு செய்தால்( இவ்விடத்தில் முதலிரண்டு வரிக்கான கருத்து சிதைந்து புது கருத்தும் கவிதையில் மலர்ந்து விடும்)

அது ஹைக்கூ.
சமீபத்தில் 1.11.2018 அன்று நடந்த ஹைக்கூப் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு ஹைக்கூ..
அழகான சிலை
அலைமோதிக் கொண்டிருக்கிறது
இங்கு முதல்வரி ..அழகான சிலை என வருகிறது..அந்த சிலை எதுவாகிலும் இருக்கலாம்..அழகிய பெண்ணுடையதாகவோ..விலங்கு..பறவை..கடவுள் என எந்த ரூபத்தை தாங்கியும் அந்த சிலை இருக்கலாம்..
இரண்டாவது வரி...அலைமோதிக் கொண்டிருக்கிறது ..என்றவுடன் படிக்கும் வாசகனுக்கு..ஓ..கடலில் நிறுவப்பட்ட சிலையாக இருக்கும்..அதனால் தான் அலைமோதிக் கொண்டிருக்கிறது என எண்ணத் துவங்குவான்..ஆனால்..
கவிஞரோ..ஈற்றடியில்..
திருடியவனின் மனது..! என முடிக்கிறார்.
ஆக..அலைமோதிக் கொண்டிருப்பது..திருடனின் மனதாகி..வாசகனின் முந்தைய எண்ணத்தை தவிடுபொடியாக்கி விடுகிறது..ஆம் நண்பர்களே..ஹைக்கூ இத்தகைய மாயாஜாலம் செய்து மனதை மயக்கும் ஒரு கவி வடிவம்..இதனை சற்றே உள்வாங்கி நீங்கள் எழுதத் துவங்கினால்..ஹைக்கூவும் எளிதாய் வரும்.
இந்த கவிதையின் சொந்தக் காரர்..காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா..அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்..
அழகான சிலை
அலைமோதிக் கொண்டிருக்கிறது
திருடியவனின் மனது..!
_ காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா.
#அனுராஜ்..