சொல்லடா கவிதை தம்பி....

சொல்லடா கவிதை தம்பி...
சுகமான காலை பொழுதில்
பொங்கு புதனில் கவி சொல்லு
புதிய கவிஞர்கள் திரும்பி பார்க்க
பாமர மக்களுக்கு விளங்கும் படி
பக்குவமான கவிதை சொல்லு
உலக மக்கள் வாழ்வில் உயர
உன்னதமான கவிதை சொல்லு
மாணவர்கள் மனதினிலே
மதியூகம் வளர கவிதை சொல்லு
சமத்துவம் ஓங்கி வளர

மகத்துவமாய் கவிதை சொல்லு....

0 comments:

Post a Comment