மாயை காட்டிய பேதை

சின்னஞ்சிறு வயதினிலே
சிக்கனமின்றி விளையாடினாள்
அத்தை மகன் வருவானென்று
அக்கரையாய் காத்திருப்பாள்
தீனிசாமான் தின்று தின்று
திரவியமாய் கதை படிப்பாள்
ஓடியாடி விளையாடி-நிதம்
உள்ளத்திளே குடியிருந்தாள்
பாசம் என்ற சொல்லுக்குள்ளே
பக்தியை நிதம் பதித்துவைத்தாள்
வயது கொஞ்சம் ஏற ஏற
வாட்ட சாட்டம் வாங்கிகொண்டாள்
கலகலப்பாய்  நகர்ந்த வாழ்வு
கட்டளிந்த பருவம் காட்டி
நாணம் வந்து நட்பை தடுத்து-
பீதிப்  புயல் வீசியது
போன மச்சான் திரும்புவதாய்
பொய்யைக்கூட சொல்ல மறுப்பான்
நீலி கண்ணீர் விட்டு நிதம்
நிம்மதியை களைத்திடுவாள்
காதல் எனும் காந்தம் எய்தி
கவர்ந்திளுத்தாள் இரும்புதனை
மாயவலையில் சிக்கி தினம்
பேயவளை காதல் கொண்டேன்
கடிகார முள்ளு ஓடும்போது
கண்ணிமைகள்  மூடும்போதும்
காந்தயலையாய் வந்து தினம்
கனவில் படம் காட்டிடுவாள்
மாலை நேர வேளையிலே
சாலையோர மழைதூரளிலே
ஒற்றைகுடை பிடித்து  சென்று
ஒய்யாரமா காதல் செய்தோம்
ஆசைகாட்டும் தாசியெல்லாம்
அந்தநேரம் மட்டும்தானே
பக்தி கொண்டதேவதையெல்லாம்
காதல் முக்தி பெற்று வாழ்வாதானே!.............





கடனும் வட்டியும்



தன்னிடம்  வாங்கிய இரவல்தனை
தந்துவிடுயென்றது   ஆழி
தாமதித்து தருவதாக உறுதி
பூண்டது கார்மேகம்
வரட்சியின் கோரத்தால்
வரண்டுப்போனது  பூமி
அதர்மத்தின் அதிகரிப்பால்
அழிந்துபோகுது நீதி 
உடனே தா! உயிர்நண்பனே!
உயிர்கள் அழியுது நாள்தோறுமே!
சினத்தின் வேகத்தால் சீன்ட
நினைத்தது மேகம் 
அடைமழையாய் 
அள்ளிதெளித்தது 
வட்டியும் கடனையும்!
கடனைதானே திருப்பி
கேட்டேன் தோழனே
கனத்த  உயிர்களை 
காவு கொண்டது
ஏன்  முகிலா!
கடனை மட்டும் கேட்டிருந்தால்
கச்சுதமாய் தந்திருப்பேன்
வட்டியுடன் கேட்டதாள்தான்
வாரி வழங்கிவிட்டேன்
அநியாயத்தை கண்டு தினம்
அமைதிகாக்க முடியாதெனக்கு 
அழுத அழுத  கண்ணீரையெல்லாம்
ஆத்திரத்தில் தூவிவிட்டேன்!
வட்டியுடன் தந்ததாள்தான்
கெட்டியாக உயர்ந்ததுவே
பொய்கைகளின்  நீர்மட்டம்!
தனப்பேராசை கூடியதால்
தாண்டவத்தை ஆடலானேன்
தர்மத்தை கூட்டி
அதர்மத்தை விரட்டி
ஆன்மீகத்தை ஊட்டி
அகமகிழ்ந்து அன்பாய்
வாழ வாழ்த்துகின்றேன் 
என்றது அழகிய வானம்



நிஜமான நினைவுகளும் நிரைவேறா ஆசைகளும்

 அப்பாவையும் அம்மாவையும்
அழகான  தம்பதிகளாய்
பார்த்து ரசிக்க ஆசை
அம்மாவின் அடிவயிற்றிலே 
அடிக்கடி உதைத்து ஆட்டம்போட ஆசை
உதைக்கும் போதெல்லாம் உரிமையோடு
தடவிவிடும் தருனத்தை பார்க்க ஆசை
கருவரை எனும் கற்பகத்தேரில்
விறுவிறுவென்று ஊஞ்சலாடிட ஆசை
தொப்புல் எனும் கொடியினூடே
தொடர்ந்து உண்டியுண்ண ஆசை
ஐரெண்டு மாதம் சுமந்த
அழகிய  சிம்மாசனம் 
பார்க்க  ஆசை
பிரசவ வலியை தாங்கி -என்னை 
பிரசவித்த பெருந்தியாகத்தை 
பார்க்க ஆசை 
பிறந்தபோது அகமகிழ்ந்து 
வாரியணைத்து முத்தமிட்ட
வதனத்தை பார்க்க ஆசை
அவ்வப்போது வந்து போகும் 
அடைத்த மூக்கு சளியோடு
தடிமல் எனும் பிணியை பார்க்க ஆசை
ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்று 
காத்திருந்து காலில்போட்டு 
தாலாட்டியதை பார்க்க ஆசை
சிரங்கு எனும் கொடிய நோய் 
சித்தரவதை செய்தபோது  மூலிகை 
போட்ட முதல் நாளை பார்க்க ஆசை
வறுமையின் கொடுமை 
சிறுமையில் வாட்டியபோது 
விசுக்கோத்தை தந்த
அப்பாவை  பார்க்க ஆசை
கல்வியை புகட்டுவதில் கரிசணையாய்
களமிரக்கிய காலத்தை பார்க்க ஆசை
ஆண்டி மகன் நல்ல பொடியனென
அனைவரும்  வாழ்த்திய 
வசந்த காலத்தை பார்க்கஆசை 
ஆடிவிழா காலங்களிலே அடிக்கடி 
யொலிக்கும் மணியோசை கேட்க ஆசை
குளப்படி செய்து கோடிபக்கம் நிற்கையிலே
வளக்கப்படி வந்து  வாரிலே அடித்தபோது
வாள்வாள்னு கத்திய காலத்தை பார்க்க ஆசை
திறமையாய் விளையாடும்போது
கைகளை தட்டிய எம்
கலைஞர்களை பார்க்க ஆசை
களிப்படைய கைகுழுக்கி  பரிசு 
தந்த பாக்கியவான்களை பார்க்க ஆசை
அரச்சுனன் தவம்  என்ற நாடகத்திலே
ஆர்வத்துடன் நடித்து போன
அழகிய நாளை பார்க்க ஆசை
சங்கீத நாற்காலி போட்டியிலே
சங்கமித்து  வெற்றி கனியை 
சுவைத்ததை பார்க்க ஆசை
அறிவிப்புக்கு அடித்தளமிட்டு கலக்கிய
அற்புத மேடையை பார்க்க ஆசை
கனகு கனகு என அடிக்கடி  முனுங்கும் 
சகபாடிகளை சளிக்காமல் பார்க்க ஆசை
எத்தனையோ நிஜமான நினைவுகளை 
நிச்சயமாய் பார்க்க ஆசை 
 நினைவுகளை சுமக்கதானே-தவிர
 இவையாவும்
 நிரைவேறா நிதர்சனமான ஆசைகள்

 







 

உயிர் தந்த உயிரே


சின்வனாய் நானிருந்தபோதம்மா
சின்னவரு என்று செல்லமாயழைத்த அம்மா
வறுமை வந்து வலைவிரித்தபோது
பொறுமையாக பசி தீர்த்தவளே அம்மா
பயந்து பயந்து ஒதுங்கியோடிய போதெல்லாம்
நயங்து நயந்து துனிவூட்டியவளே அம்மா
பிணி வந்து பிரச்சினை செய்தபோது
தனியா நின்று தாங்கிச் பிடித்தவளே அம்மா
வறுமையின் தன்மையை காட்டி வளர்த்தாளம்மா
வாழ்க்கையின் சுவையை உணர்ந்து கொண்டேனம்மா
பத்து மாதங்கள் சுமந்ததா அம்மா-என்றும்
எனது சொத்தே நீங்கள்தான் அம்மா
நாளும் புத்தியை உறைப்பதிலே அம்மா
தோல் கொடுத்தவளே நீங்கதானம்மா
அன்பை பொழிவதில் நீங்க ஆகாயமம்மா
அடைமழையாய் தினமும் தொடருதம்மா
ஆனந்தகண்ணீரே அடிக்கடி வருகுதம்மா-அதனால்
அணை கட்டி கவிவடிக்கினேனம்மா
பொறுமைக்கு அடையாளமானது பூமியம்மா-அதையும்
அருமையாக மிஞ்சிவிட்டீரே அம்மா
எனது இதயப்துடிப்பே நீங்கதானம்மா
எந்நேரமும் லப்டப் நாதமாய் ஒலிப்பது நீங்கதானம்மா
மங்காத மனது கொண்டதாள் அம்மா
தாத்தா மகிழ்வாய் இட்ட நாமமோ தங்கம்மா
தரணியில் அவதரித்த தங்க அம்மா
தயாள சிந்தையில் வாழனும் நீங்களம்மா
ஆண்டுகள் பல வாழனுமம்மா-அதில்
ஆயுள்வரை என்னை சுமக்க வேண்டுமம்மா
வாழ்க தாயே வளமுடன்
வாழ்த்துகின்றேன் உங்கள் கற்கண்டு