புரிந்துணர்வு வேண்டுமடி
பிரிந்துணர்வு வேண்டாமடி
நேரத்திற்கு வரலேயடி
நேயம் என்றும் குறையாதடி
நீ எனக்கு இருக்காயடி
நான் உனக்கு உண்டேனடி
சந்தேகம் கொள்ள வேண்டாமடி
சந்தோசம் என்றும் அழியாதடி
மஞ்சம் என்றும் ஏங்குதடி
கஞ்சம் கொள்ள வேண்டாமடி
சினம் கொண்ட வதனமடி
சிகப்பாய் இருப்பது சிறப்படி
காத்திருக்க வேண்டாமடி
காதலிக்க நான் வாறேனடி
0 comments:
Post a Comment