கவிஞரையா நீலாபாலனுக்கு!
கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ!
கவி கடலில் விளைந்த முத்து நீ!
பதுளை சரஸ்வதியில் பனுவல் வெளியிட்டாய்!
இன்று பசறை மண்ணின் முத்திரையிட்டாய்!
உம்மை ஆலாபிப்பது அற்சரத்தாலா? அல்லது
அழகிய மலர் புச்சரத்தாளா?
பாமாலை பாடிச்செல்வார் பலகோடி இன்று
கவிமாலையில் வாழ்த்த வந்தேன் பலர்கூடி
கடலோரத் தென்னைமரம் தந்த காற்று- இன்றும்
உடலோடு உரசி செல்லுது எம்மை பார்த்து!
மட்டகளப்பில் மலர்ந்த மன்னன் நீ!
மலைகவி வட்டத்தில் விளைந்த மதியுக மைந்தன் நீ!
கவிதைக்கு நான் அன்று கன்றுக்குட்டி!
கவி கற்றுத்தந்த நீரோ எந்தன் செல்லக்குட்டி!
கிழக்கில் உதித்த புதல்வன் நீ!
ஊவாவில் இணைந்த உன்னத மாப்பிள்ளை நீ!
கவண் கொண்டு விரட்டுவார்கள் பறவைகளை!
பணம் கொண்டு திரட்டுவார்கள் உன் பனுவல்களை!
தொலைபேசியில் அழைப்பு தந்தீர் அன்று! – இன்றும்
விலைவாசியாய் உயருது உனது அன்பு!
வாழ்க உனது கவிச்சேவையையா!
வாழ்நாள் முழுக்க எங்களுக்கு தேவையையா!
நீடூடி வாழ்க நீலாபாலனே!
நிதமும் வாழ்த்துகின்றேன் கவியுடனே!
கவிதைக்கு நீர் சக்கரவர்த்தி!
களிப்புடன் வாழ்த்த வந்தேன் கைகள்தட்டி!
2 comments:
நன்று
நன்றி
Post a Comment