#தியாக உணர்வை மனதில் சுமந்து
#சிசுக்களையே உயிராய் நினைந்து
காலத்தால் அழியாத #கற்பக விருட்சமே
#கனகராஜாவின் கருணைத் தந்தை
தனியே வாழ்வில் நீச்சலடித்து
தலைக்குனியா கம்பீரமாய் திகழ்ந்து
வாணியே நாவில் தவழ்ந்திட
#அமிர்தமாய் தமிழை நுகர்ந்திட
உயிரணுக்களுக்கு உயிரூட்டம் தந்த
உன்னத தெய்வமே #தகப்பனார்
#நகைச்சுவை பேசுவதில் நாகேசை தள்ளி
தாத்தாவின் செயல்களை #தமயனிடம் சொல்லி
கொஞ்சிப் பேசும் #பிஞ்சி உறவே
அறிவுத் #தந்தையே ஔசத மகவையே
விண்ணில் இருந்தால் #வீரமகனுக்கு ஆசி
மண்ணின் இருந்தால் #மகனுக்கு ராசி
எங்கிருந்தாலும் என்னை #தினம் பேசி
தங்கிவாழும் மனசே #அழகிய காசி
#தகப்பனார் என்பதோ தகப்பன் ஆனார்
#தத்துவம் சொல்லவே #மடலில் பதிந்தார்
#உண்மையான உணர்வை #உயரில் கலந்தார்
#உடம்பில் நுழைந்தே #நிமலனாய் பதிந்தார்
நினைக்காத நேரம் #நிலவும் மலரும்
மனைக்காக வீரம் தினமும் வளரும்
சிந்தையில் வாழும் அன்புத் தந்தையே
எ(இ)ன்றுமே வாழ்வின் #சுடரொளியே
0 comments:
Post a Comment