செயலாய் நான்
கல்வி கற்க ஆவல் பிறந்து
கற்றேன் நாளும் தினமும் பயின்று
ஏழ்மை வந்து கண்ணில் பதிந்து
வாழ்வும் செழிக்க வழி காட்டியதே
தந்தை மட்டுமே வேலை செய்து
தரணியில் உயர அறிவும் தந்து
உலகம் போற்றும் உன்னத மகனாய்
உருவாக்கிய பதியே தந்தை என்பேன்
எண்ணில்லா துயரை யான் தகர்த்து
சிந்தையிலே பயிரை தான் வளர்த்து
முயற்சி மலரில் முளைத்த முள்ளை
பிடுங்கி எறித்த பிள்ளை நானே
இலக்குதனை விளக்காய் இதயத்தில் ஏற்றி
ஏழ்மையின் வரவை தைரியமாய் விரட்டி
செம்மையான வாழ்வை சிறப்பாய் களிக்க
கரையினை கண்டேன் செயலாய் நானே
முழுப்பெயர் -பழனியாண்டி கனகராஜா
ஊர்- கோணக்கலை, காவத்தை, பசரை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment