காற்றுவெளி


அனைத்துயிரும் வாழ்ந்திடவே
அத்திவாரமான காற்றலையே
நீயின்றி எவ்வுயிரும்
நிம்மதியாய் வாழாதிங்கே

இதயம் மெல்ல துடித்திடவென்று
இன்னிசை நாதமாய் நீ புகுந்து
சந்தோச வாழ்வில் பயணித்திடவே
சகலருக்கும் வாழ்வு கொடுத்தாய் தாயே
இயந்திர வாகனங்கள் ஏராளம் உருவாக்கி
இயற்கையின் வெளியில் புகைதனை கக்கி
எண்ணற்ற நோய்களை பரப்பும் திட்டம்
இனியும் வேண்டாம் உனது நாட்டம்
நல்ல மரங்களை நாளும் நேசித்து
செல்ல வாரிசுகளாய் கூடி அரவணைத்து
நல்ல காற்றை நாசினில் நுழைத்திடுவோம்
சூழலை காத்து சுகமாகவே வாழ்ந்திடுவோம்

0 comments:

Post a Comment