தாய்நாடு ************


தாய்நாடு என்றும் எம் தாய்வீடு
மூவின மக்களும் செறிந்து வாழும்
முழங்கும் சங்காய் என்றும் திகழும்
முத்தாய் விளங்குவதே இத்திருநாடு


உரிமையை உடனே கேட்டு பெற்றிட
சுதந்திர குருகாய் எங்கும் பறந்திட
இறைமையை தந்த இதயநாடாம்
இதுவே எமது சொந்த வீடாம்

உலகெங்கும் வாழும் உறவுகளிடையே
பாலமாய் இணைந்து பாசம் பிணைத்திட
குடியுரிமை அனுமதி வழங்கிய நாடாம்
கூட்டுறவால் ஞாலத்தை வென்ற நாடாம்

தொழிலை நித்தம் தூய்மையாய் செய்ய
தொந்தரவின்றி மனையோடு வாழ
நாம் வாழும் நாடே ஈழத்திருநாடு

0 comments:

Post a Comment