பாடல்: தை பொறந்தா வழி பொறக்கும்

தாய்ப்பாசம்
****************
பல்லவி
சேய் சிரித்தா தாய் மகிழும் சொந்தமே சொந்தம்
அன்பிருந்தா தேன் வடியும் சொந்தமே சொந்தம்…(2)
சேய் சிரித்தா…

சரணம்-1:
கருவினிலே பால் கொடுத்தாய் சொந்தமே சொந்தம்
இடுப்புவலி தான் பொருத்தாய் சொந்தமே சொந்தம்…(கருவினிலே)
வறுமையினை தோற்கடித்தாய் சொந்தமே சொந்தம்
வறுமையினை தோற்கடித்தாய் சொந்தமே சொந்தம்
வயிற்றினிலே எனை சுமந்தாய் சொந்தமே சொந்தம்
சேய் சிரித்தா …
சரணம்-2
தந்தையரின் சிந்தையாலே சொந்தமே சொந்தம்
மதிமழையோ பொழியுதமா சொந்தமே சொந்தம்…(தந்தையரின்)
சின்னவனின் திறமையிலே சொந்தமே சொந்தம்
எண்ணமெல்லாம் குளிருமம்மா சொந்தமே சொந்தம்…(சின்னவனின்)
சேய் சிரித்தா…
சரணம்-3
கலைஞனையே ஈன்றெடுத்தாய் சொந்தமே சொந்தம்
காசினியில் புகழ் நுகர்ந்தாய் சொந்தமே சொந்தம்…(கலைஞனையே)
வயித்தகட்டி வளர்த்தெடுத்தாய் சொந்தமே சொந்தம்
வயித்தகட்டி வளர்த்தெடுத்தாய் சொந்தமே சொந்தம்
வாழ்வதற்கே உயிர்கொடுத்தாய் சொந்தமே சொந்தம்…
சேய் சிரித்தா...

0 comments:

Post a Comment