#அந்திப்பொழுதும் #அவளின் #நினைவும்

அந்தி சாயும் வேளையிலே/
மரத்தின் நிழல் தொடுகையிலே/
இருவரும் ஒன்றாய் கூடி அமர்ந்து/
இனியசொல் பகிர்ந்தோமடி/

தென்றல் வந்து தொட்டு பார்க்க/
தேவதை நீயோ தோளில் சாய/
எத்தனை சுகம் நம்மில்
மலர்ந்து/
இதயகீதம் மீட்டியதே/
நினைவுகள் என்றும் நிசமானவை/
நீயோ எந்தன் வசமானவள்/
எதிர்கால வாழ்வுதனை/
எதிர்ப்பார்த்த காலமது/
ஊடலும் மோதலும் ஒரு நொடியில்
தோன்றி மறையும்/
உண்மைகாதல் மட்டும்
உன் பெயரை சொல்லித் திரியும்/
கலாட்டா வந்த நேரமெல்லாம்
கண்ணியமாய் நாம் இருந்தோம்/
காலங்கடந்து போனதுமே
துரோகம் செய்தது ஏன் கிளியே/
சாயங்கால நேரத்திலே
தலைசாயும் சூரியனும்/
சத்தியகாதலை
பறைசாற்ற
சாகாவரம் பெற்றது அன்றே/
அந்தகால கால நினைவெல்லாம் /
ஆயுள்வரை தொடரும் கண்ணே/
நல்லெண்ணம் மலர்ந்திடவே/
அந்திமாலையில் பூத்திடு பெண்ணே/

0 comments:

Post a Comment