தொடு வானம் தூரமில்லை


இலக்கு என்ற விளக்கு
ஏற்றினால் எங்கும் சிறப்பு
இருளை நீக்க எத்தனையோ ஒளியிருக்கு
இமயம்தனை தொட்டிட பாதையை வெட்டு

முயற்சி எனும் பயிற்சி எடுத்து
முன்னேற்ற கோணத்தில் வாழ்வை நகர்த்து
சாதனை புரிந்த சாம்பவான்களெல்லாம்
சோதனைகளை தாங்கி வந்தவர்கள்தான்
கவியென்ற விதை முளைப்பதற்கு
கணநாட்கள் சென்றதுதான்
கரிசனையோடு கிறுக்கியதால்
பரிசுகளையெல்லாம் வாரி தந்ததுவே
விருதுகளை பெற்றிடவே
விடாமுயற்சியை விடவில்லை
தன்னம்பிக்கையும் வளர்ந்து வளர்ந்து
தானாய் சிகரம் தொட்டதிங்கே
குறிக்கோள் என்ற இமயமலையை
கூடிய சிக்கிரம் அடைந்திடவே
தைரியமென்ற ஏணியை எடுத்து
தடம் பதித்த சிங்கக்குட்டியடா

0 comments:

Post a Comment