பௌர்ணமி நிலவில்


வானவீதியில் உலாவரும்
வளர்மதியே
வசியமாகிப் போனேன்
உன் பார்வையிலே
கதிரவன் உன்னை
காண எண்ணுகையில்
நாணத்தில் மறைந்து
நளினம் காட்டுவதேனடி

மெய்ப்பீரமோ மெல்லிய
போர்வையால் மூடுகையில்
விரகதாபத்தால் மனதோ
விடலை பருவமானதடி
என்னவளை அழகென்று
இவனின்று ரசிக்கையிலே
வானரதத்தில் நீ வருகையிலே
தடுமாறிப் போனேனடி
எப்பொழுதும் வருவாயானால்
முப்போழுதும் மகிழ்ந்திடுவேனே
எதிர்ப்பார்த்த விழிகளிரண்டோ
விடுமுறையும் கேட்டதிங்கே
முழுமதியாய் நீந்திடும்
மூவுலக தேவதையே
பூவுலகில் அவதரித்து
வீடுபேறு தந்துவிடு
எமதர்மராசாவே
இன்னொரு பிறவி தந்துவிடு
பௌர்ணமி நிலவின் அனுமதியோடு
பவனி வர அவா இன்று

0 comments:

Post a Comment