நினைவே சங்கீதம்


நினைவே சங்கீதம்
நீந்துதே மனதில் எந்நாளும்
கானங்களும் ஒலிக்கிறதே
காதலின் நினைவுகளும் பிறக்கிறதே

உண்மைக் காதலின் உத்தரவாதம்
ஊன்றிப் பார்த்தால் கானம் பாடும்
அலைகளின் ஓசையோ அடையாளம்
அன்பிலே மலர்ந்த கீதாசாரம்
நினைவுகளை நீந்தவிட்டு
நெடுநேரம் காத்திருந்தேன்
வெற்றிவாகை சூடிக் கொண்டு
நெற்றில் திலகம் இட்டதிங்கே
அன்பு என்ற வார்த்தையெல்லாம்
அவ்வப்போது மலரும் கானலல்ல
ஆயுள்வரை நிழலைத் தந்து
ஆதரிக்கும் அசையா ஆலமரமே
உன்னை நினைத்து மூச்சிவிடும்
உயிர்க்காதல் சங்கீதமாய்
உலகம் அழியும் காலத்திலே
தடம் பதிக்கும் சாதனை நினைவே
இசையால் வசையாகா இதயந்தனிலே
இனிமை சேர்க்கும் உன் நினைவே
ஒவ்வொரு நொடியும் நினைத்து நினைத்து
உள்ளத்தில் பதிந்த ரீங்காரமே

0 comments:

Post a Comment