#தண்ணீரெனும் #தீர்த்தம்



இயற்கை அன்னையின் உடையே
எமக்கு கிடைத்த கொடையே
மண்ணைக் காக்கும் மரமே
மழையை தந்த குணமே

ஊருக்கெல்லாம் உதவிடும் நீயே
ஓய்வில்லாது போராடும் நீரே
தனத்தை கொடுப்பது தர்மமே
தான்தோன்றியாய் வீணடிப்பது பாவமே
ஓடும் நீருக்கோ ஒற்றுமையுண்டு
ஒருநாள் கடலில் சேர்வதுமுண்டு
கிடைத்த பொக்கிசத்தை கிழிந்தெரிந்து
பீலி சண்டைகளோ நாளும் மூண்டு
காவல் பணிமனை முன்னே இன்று
கைக்கட்டி நிற்பது ஏனடா மனிதா
தண்ணீர் பஞ்சம் வரும்போது-நீயோ
தவமிருப்பாய் பீலிகரையில் நின்று
எப்போ தண்ணீர் வருமோவென்று
ஏக்கத்துடன் கலங்குவாய் நின்று
வெறுமனே குழாய்களை திறந்து சென்று
வெட்டிக் கதைகள் பேசினாய் அன்று
சிந்திய துளிகளையெல்லாம் தினமளந்து
திருப்பி தருவாயா நீயே இன்று
கடவுளுக்கே வந்த கோபமென்ன
கலங்க வைத்த சாபமென்ன
இத்தனைக்கும் இனிய பதில்
இறைவன் நம்மை சபித்ததாலே

0 comments:

Post a Comment