#அந்தகால #சித்திரயே #வா #வா


சித்திரையும் வந்துரிச்சி
நித்திரையும் கலஞ்சிரிச்சி
அந்த கால வாழ்க்கையெல்லாம்
அப்படியே மனசுல ஒட்டிக்கிச்சி

கல்விய புகட்டுனுமுனு -அப்பா
கடையில வச்ச நகைகளெல்லாம்
அடகுல மூழ்கி போக முன்னே
ஆதாய காசுல மீட்டுனாரே
பட்டாசு கொளுத்த கூடாது மகேன்
சுட்டா கையில புன்னாகிடுமுனு
பக்குவமா அம்மா சொன்னதுமே
மத்தாப்பும் சுத்தி மகிழ்ந்தேனே
மகிழ்ச்சியா நானும் இருந்தேனே
பணிய கானுலபோய் குளிச்சிட்டு
படபடனு வந்தேனே வீட்டுக்கு
பலகார வடையெல்லாம் எடுத்துவந்து
பத்திரமா அப்பாட்ட நானுங்கொடுக்க
மொறப்படி வாழையிலயில படையலிட்டு
மூத்த குலதெய்வத்த வணங்கினோமோ
முந்தி விநாகனை நாங்க நெனைத்து
முதல் தேவாரத்தை அம்மா தொடங்க
பள்ளியில படிச்ச தேவரத்தயெல்லாம்
பக்தியோட படிச்சோம் மூவருமே
அக்கம்பக்கம் சொந்தங்களுக்கென்று
அக்காவும் நானும் பொதி செய்து
ஆசையுடன் கொண்டு சேர்த்த
அந்தநாட்களெல்லாம் மீண்டும் வருமா
ஒன்றுமறியா பருவமது
உள்ளத்துலே இல்ல சூதுவாது
நல்லதே படிச்சி வாழ்ந்ததாலே
நானும் கவியில சொல்லலானேன்
வா வா எமது சித்திரயே
வாழ வழி காட்டிடுங்க புத்தரே
சந்தோசமா வீசுங் காற்றலையே
சமாதான வாசம் வீசிடுவே
நேரம் காலை 8.09

0 comments:

Post a Comment