நினைவெல்லாம் நீயே


என் வாழ்க்கைச் சோலையில் மலர்ந்தவளே

இல்லற சுகந்தம் இனிதாய் வீசியவளே
சொந்த உறவில் பந்தமாய் நுழைந்தவளே
சுந்தரக் கிளியே சூசகமாய் உலாவுகிறாயே

கனவிலும் நீதான் நினைவிலும் நீதான்
கந்தனின் வள்ளியாய் காசினியும் நீதான்
உணவிலும் நீதான் உணர்விலும் நீதான்
வாசகமும் நீதான் வசந்தமும் நீதான்

உயிரின் காதலாய் ஊடுருவும் தேவதையே
தயிரின் வாசமாய் தாகம் தனித்தாயே
உந்தனது நினைவாலே உலாவும் மாருதமாய்
எந்தனது நினைவினிலே எல்லாமே நீதானே

0 comments:

Post a Comment