வசந்தங்களே வாழ்த்துங்களேன்


இருமனம் இணைந்த திருமணத்திலே
நறுமணம் வீசப்போகும் நந்தவனமே
பிறந்த வீட்டுக்கு பெருமையையும்
புகுந்த மனைக்கு புகழையும்
ஈட்டித் தந்திடு இனியவளே
அன்பை தெளித்திடு அன்னமே
ஆயுள்வரை வளரும் இன்பமே
அன்பென்ற அத்திவாரத்திற்கு
அடிக்கல்லாய் சென்று
தியாக நிறத்தால் சித்திரம் வரைந்து
சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்
செல்லமே

0 comments:

Post a Comment