அகரத்தின் சிகரம்




அகரத்திற்கு  அத்திவாரமிட்ட  அறிவுக்கூடமே
அதுவே யான் பயின்ற இப்பள்ளிக்கூடமே
காவத்தையிலிருந்து கல்லூரிக்கு இரண்டு கட்டை
கல்வியை கற்பதிலே நாங்கள் காய்ந்த சிரட்டை
ஓடியோடி சளைத்தவர்கள் ஏராளம்-நித்தம்
தேடித்தேடி படித்தோமே தேவாரம்
காலையிலே தொடங்கிடுவார்  மேலதிக வகுப்பு
காலக் கிரமத்திற்கு வருவதே எங்களது சிறப்பு
தோட்டப்
பாடசாலையாய்  தொடங்கிய  கல்விக்கூடமே-இன்று
ஆயிரம் கல்விசாலையாய்  அங்கீகரித்த அறிவுச்சுரங்கமே
எண்ணற்ற பட்டதாரிகளை  ஈன்றெடுத்த தாயே
கவிஞனாய் மிளிர்கின்ற  நானுமுந்தன் சேயே
ஆசிரியக் குழாம்களின்  அயராத  விடாமுயற்சி
அதுவே  நீ   கண்ட  அற்புத  வளர்ச்சி
ஆண்வனுக்கு அழகிய நாமமோ பதியையா
அறிவூட்டிய தேவரோ நடணசபாபதி ஐயா
அமரர் இளங்கோ ஐயாவின் தியாகம்
ஆத்மா சூடிகொண்டதே இம்மகுடம்
நல்குணம்  கொண்ட  எண்  நவமென்பார்கள்
நல்வழிக் காட்டிய மகான் நவரத்தினமென்றார்கள்
கோணங்கள்
 கணிதத்தில்  பல  உண்டு
கோபுரமாய்  உயர்ந்துவே  கோணக்கலை  இன்று
சரித்திர விதைகளை விதைத்து விதைத்து
சாதனைகள்
பல படைத்து படைத்து
படர்ந்த  விருட்சமாய்  பார் போற்ற  வாழ
பாவலனாய்
 உன்னை வாழ்த்துகின்றேன்
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு
வாழ்துகின்றேன்  உன் கற்கண்டு
வாழ்க வாழ்க மாணவர் குழாம்
வளர்க வளர்க நமது மனிதகுலம்
கவிஞர்
 பழனியாண்டி கனகராஜா

0 comments:

Post a Comment