கலைவாணியின் பாணி


சரஸ்வதி பூசை இன்று
சகாக்களோடு தொழுதேனே அன்று
வைகறையிலே தானே எழுந்து
ஆசையோடு ஆற்றிலே குளித்து
வண்ண மலர்களையெல்லாம் கொய்து
வாஞ்சையோடு பள்ளியறை சென்றோம்

பாதையோரம் பூத்துக் குழுங்கும்
பலகோடி மஞ்சற் பூக்களையெல்லாம்
ஆர்வத்தோடு அவசரமாய் பரித்து
நேர்த்தியாக பையிலே குவித்து
நிர்வாகத்திடம் கொடுத்ததுமே
நிறைவாய் மனதிற்கு இருந்ததுவே

பாமாலை நாமும் பாட
பரவசமாய் நாமகளும் கூட
பக்திமயம் சக்தியாய் பிறந்து
பாலர்கள் மனதில் கலந்துவே

பூசையும் இனிதே நிறைவு பெற்றதுமே
பொங்கலை கதவருகே கொண்டு வந்ததுமே
பந்தி பந்தியாக நாமும் வந்துமே
பகிர்ந்து உண்டோம் நட்பூக்களோடுமே

பக்தி சக்தியும் இரண்டற கலந்து
புத்தியும் சித்தியும் தூய்மை மலர்ந்து
பாகுபாடு ஒன்றும் தெரியா
பச்சிளங் குழந்தையாய் கற்றோம் யாமே

ஆன்மீகச் சுவையும் அகத்திலூற
இன்சொல் கல்வியும் தேனாய் சேர
நல்லெண்ணம் ஊட்டி வளர்த்த
நாற்குரவர்களுக்கும் நன்றியையா

0 comments:

Post a Comment