உன் நினைப்பில் பூ தொடுத்தேன்
உன் நினைப்பில் பூ தொடுத்தேன்
உயிரையே அதில் ஈடு வைத்தேன்
அழகு மலர்களை கையில் எடுத்து
அன்புத் தேனை நாளும் குடித்து
காதலிக்க நினைத்தபோது
கண்ணொளியில் சிக்கியதே
வாசம் வீசும் வண்ண மலர்கள்
நேசம் கொண்ட நீண்டச்சரமாய்
பாசமெனும் உன் நினைப்பை
பக்கத்திலே வந்து சுமந்ததடி
நினைவுகளோ தொடர் கதையாய்
நீண்ட கதை சொல்கிறதே
கண்ட நாளை மறக்கவில்லை
காவியமும் படைக்கவில்லை
உள்ளம் என்ற சுவடினிலே
உன்நாமம் ஒலிக்கிறதே
ஒன்றாய் கூடிய மலர்களெல்லாம்
உன் மனசை உடனே கவர்ந்திடவே
அத்தான் நினைப்பில் பூத்தொடுத்த
ஆயுள் வரை உன்னை மறவேனடி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment