துன்பத்தில் தோள் கொடுப்பது மனைவி



பார்க்காமல் வந்த பார்வதியே
பாவங்களை நீக்கும் புண்ணியநதியே
உண்மையின் அடையாளமான உத்தமியே
ஊரே போற்றும் சித்திரமே
பிணியென்று எனக்கு வந்துவிட்டால்
பிசினைப் போல ஒட்டிக் கொள்வாளே
அருகினிலே தானிருந்து நித்தம்
ஔடதமாய் கலந்து ஆதரிப்பவளே
கண்ட நாள் முதல் கொண்டு
கண்ணிமைக்குள் வைத்து காப்பவளே
துன்பம் என்ற வாசகத்தை
தூக்கி தொலைவில் வீசியவளே
நல்குரவு என்ற நாற்றுதனை
நாட்ட நாட்டம் நாடாதவளே
அன்பு எனும் அகல்விளக்கேற்றி
அடியோடு இருட்டை நீக்கியவளே
வாழ்க்கை எனும் போருக்குள்ளே
வாகைச் சூட வந்தவளே
மனசு என்ற மாளிகைக்குள்
மங்காமல் வைத்து காப்பாளே

0 comments:

Post a Comment