முயற்சியே திருவினையாகிறது



வறுமை குடும்பத்தில்
பிறந்தவனே
வாழ்வில்
வாகை சூடுகிறான்
உடலை வளர்க்க
உணவை சுருக்கி
உபவாசம் செய்பனும்
ஒல்லியாகிறான்

இன்று இளமை உணவு
உண்ணும் தனவந்தன் எல்லாம்
அன்று ஒரு பிடி சோற்றுக்கு
தவமிருந்தவர்கள்தான்
முயற்சி எனும் தாரக மந்திரத்தை
முழு நேரமும் ஓதியவர்கள்தான்
உலக சாதனையில்
கீர்த்தி பெற்றோரெல்லாம்
விடாமுயற்சியின் விதைகள்தான்

வாழ்க்கைத்துணையின்
நெறியாள்கையோடு நீந்தியவரெல்லாம்
கலங்கரைவிளக்கங்களாய்
கரையை கண்டவர்கள்தான்
முயற்சி என்ற பயிற்சியை
மூவேளையும் தான் ஜெபித்து
முக்தி பெற்ற புரோகிதர் தான்

கவிஞனென்ற அடையாளத்தை
பெற காத்திருந்த நாணலே நான்
பாவலர்களின் கணிப்பிலே
பட்டைத் தீட்டப்பட்டவனும் யானே

தோல்விகள் பல கண்டு
துவன்று விடவில்லையே
வெற்றி கனி சுவைத்திடவே
முயற்சி மரம் ஏறிவந்தேன்

0 comments:

Post a Comment