இயற்கை என்னும் இளைய கன்னி


இயற்கை என்னும் இளைய கன்னி
மசக்கையினால் மாம்பழம் கிள்ளி
எழில் கொஞ்சும் இத்தரணியிலே
நிடலம் வளைத்த வானவில்லோ
விசும்புதனை கட்டியணைத்து
குசும்பு செய்யும் கோமகளோ

நட்சத்திரம் வானில் மின்ன
நடுநிசியில் ஊருறங்க
நிசப்த வேளையில்
காதல்உலாவும்
நிலாமகள் நீதானே
அழகு மகள் தேர்போல
அரவணைக்கும் தாய்ப்போல
திங்களெனும் பெயரில் வந்த
தங்கப்பாவை நீதானே
காற்றை நீயோ காதலித்து
ஆரணிய தேவதைகளை
கட்டிப்பிடித்து சல்லாபிக்கும்
தென்றலும் நீதானே
பயணம் பல செல்லும் போது
பாவை உன்னை நான் மறவேன்
அம்மா என்ற உயிரைக்கூட
சும்மா தந்தவள் நீதானே
செயற்கை என்னும் நவீன மங்கை
இயற்கையின்றி வாழ்ந்திடுமோ

0 comments:

Post a Comment