மாமனே ஒன் நெனப்புதான்

மாமனே ஒன் நெனப்புதான்
மனசுல புகுந்து வாட்டுதடா
காதலிச்ச நேரத்துல
கருத்த பாலத்து வீதியில
பாசமழ பொழிஞ்சி நாமும்
நேசவழி தொறந்தோமே
காதலிச்ச காலத்துல
காட்சியெல்லாம் நீயாயிருந்த
தாலி கட்டின பின்னால
தட்டான்பூச்சா பறந்துப்போக
ஒன்ன நெனச்ச ஏமனசு
ஊசலாடிய தனிமரமா
நெனப்பு மட்டுமே மாறாம
நெசமா காதல தேடுதிங்க

0 comments:

Post a Comment