தமிழா எழுவது எப்போது


வீழ்ந்து கிடக்கும் வீர மண்ணில்

விதைத்தோம் தமிழ் விதைகள் அன்று
விருட்சமாகி நிழல் தரும் முன்னே
போர்களமாகிப் பொய்த்துப் போன தேனோ

அநியாயம் கண்டு அதிர்வை ஒழித்து
நியாய மலையை நெஞ்சில் அமைத்து
மறவன் என்ற தமிழை வார்த்து
மண்ணிலே நீயும் செயித்து காட்டு

பிறப்புகள் எல்லாம் ஒரு வகுப்பு
பிரிவினை இல்லா உயிர்த் துடிப்பு
தமிழின் தடமாய் களம் அமைப்பு
தனித்துவமே நமது கடும் உழைப்பு

வானத்தை கண்டு நாம் பயந்தால்
வரும் மழையைத் தாங்குவது யார்
அருகம்புல்லாய் மீண்டும் உயிர் பெற்று
தளிராய் தமிழா எழுவது எப்போது

0 comments:

Post a Comment