உறங்காத இரவுகள்


வாலிப உணர்வு வாசலில் கோலமிட/
வயதின் தாகமோ
மெதுவாய் மோகமிட/
தென்றலின் தீண்டலாய்
தேகத்தில் நுழைந்தவளே/
சேற்றிலே மலர்ந்த
செந்தாமரை நீயடி/ இலைதனிலே
ஒட்டிக்கொள்ளா இருதுளியாய் யாமிருக்க/
இரவுகளின் பசிகளுக்கு
இனிமை தர யாருமிலர்/
உன்னினவை சேமித்தபடி
ஒவ்வொரு நொடியும் கழிகையிலே/
உறங்கா இரவுகளை
உடனே மீட்டிக்கொடு/

0 comments:

Post a Comment