மனமே கோவிலானால்.....


நேர்மறைச் சிந்தனையின்

நிம்மதித் தடமே/
நினைவுகளை சுமந்து செல்லும் அகக்கூடமே/
தீவினையும் நல்வினையும்
திக்குமுக்காடும் திருத்தலமே/
எண்ணங்களை பிரித்து
காட்டும் திரவியமே/
எப்போதும் நீயே
இம்மையின் ஆலயம்/
சுமுகமாக செயற்படும்
சுந்தர நாதமே/
உன்னை சுடுகாடாக்குவது
கயவனின் வேலையே/
ஆற்றுப்படுத்தும் அழகான
மனமென்றும் திருக்கோயிலே/

0 comments:

Post a Comment