நீ இல்லாமல் நானில்லை
அன்பே உன்னை நினைக்காத நாளில்லை!
நினைக்கும்போதே என்னுள் புகுந்தாயடி!
பள்ளிப் பருவத்திலே காதலித்த உன்னை!
பாதியிலே மறந்தானடி மலைக்கவியான்!
காரணங்களும் நானறியேன்
காதல் ரதி தேவதையே!
பல ஆண்டுகளுக்கு பிறகு நீயோ
பாவலனைத் தேடி வந்தபோது!
எத்தனை சுகம் எனக்கென்று
எழுத்தில் சொல்ல முடியாது கண்ணே!
நீ வரும் வரைக்கும் காந்திருந்த
வாய்மைக் காதலன் நானன்றோ!
என்னையும் உன்னையும் இரண்டற கலந்தது
எல்லாமறிந்த ரீங்காரமன்றோ!
பல வடிவுப் பெயரில் வந்து
வசீகரித்த போதும் அன்பே!
உன்னை நானும் மறந்ததில்லை
என்னை யாரும் நெருங்கவில்லை!
அத்தனைப் பேரையும் புறந்தள்ளிவிட்டு
அன்பே அடியேன் உன்னை ரசித்தேனடி!
அவ்வப்போது நீயும் வந்து
அடிமனதை தூண்டும்போது!
காதலிக்கவும் ஆசையடி
கடமையோ என்னை தடுக்குதடி!
ஒரு நாளும் நானுன்னை மறவேனடி!
உத்தமியே நீதான் என்
புதுக்கவிதையடி!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment