அழகிய கிராமம்


சேவலும் காலையிலே சீதேவியா கூவ
செழிப்பான கிராமமோ கண் விழிக்க
ஆலய மணியின் ஓச கேட்டுக்கிட்டே
ஆசயோட மனக்கண்ணை கசக்கினரே
குருவிகளோ கூச்சிலிட்டு கொண்டாட்டமா பவனிவர
கொழுந்துமலஅழகயல்லாம் குதூகலமா பாக்கயில
பச்சபச்சயா படந்திருக்கும் பாப்பவர கவந்திழுக்கும்
கல்விசால கடக்கும் பாத எல்லாம்
பலா மரமோ நெரைய இருக்கு
ஆச வந்தா புடுங்கி சாப்பிட
அதிகாரமோ எங்களுக்கிருக்கு
கிராமத்து வாசோம் காற்றோட வந்து
கிளுகிளுப்ப தூண்டிருக்கு
நகர வாழ்க்கை தந்த வெறுப்ப
நம்ம கிராமம் விரட்டி அடிக்கும்
நந்தவன மனமாக
நாளெல்லாம் செறகடிக்கும்

0 comments:

Post a Comment