நோய்களே வெளியேறு

உலகையே ஆட்டிப் படைக்கும்
உயிர்க்கொல்லியே//

உன்னைப் பிரசவித்த
கருவறையும் தெரியலையே//

அரைமுதல் அம்பலம்வரை
ஆவேச உன்னாட்சி//

அழிவை நோக்கி
பயணிப்பதா உன்முயற்சி//

மண்ணுலகில் வாழ்ந்திடவே
ஆசையுறும் மாந்தர்களை//

கண்களிலே காட்டாதபடி
கண்முன்னே மாய்ப்பதேனோ//

வந்தவழி திரும்பி விடு
வசந்தகாலம் திருப்பிக் கொடு//

உன்பெயரை உச்சரிக்க
உள்ளுணர்வு வெறுக்குதிங்கே//
உடனடியே உலகை மறந்து
ஓடிவிடு பெருபிணியே//

நோகாமலே வெளியேறு நுண்மியே//

நோய்களையெலாம் நொடியில் விரட்டியே//



0 comments:

Post a Comment