விழி தேடுதே உன்னை



மூவாறு வயதினிலே முக்கனியாய் சுவைத்தவளே
முத்தமிழின் வடிவினிலே மூச்சாகி
திகழ்ந்தவளே//

திக்கெல்லாம் உன்னுருவம் திருவிழாக் காட்சியாக
தேடியே அலையுதடி
திருட்டுப்போன மகவையாக//

அன்பை விதைத்து நீ உறங்க
ஆசைக் காதலை நான் பருக
பாதுகாப்பு வேலிதனை பார்வையிலே இட்டதாரோ//

மனதில் ஓடும் காதல் நதி
மாமனைப் பாடி விழி யசைக்க
விண்மீனின் விழியாலே விவேகமாய் தேடுதடி//


0 comments:

Post a Comment