விழி தேடுதே உன்னை
மூவாறு வயதினிலே முக்கனியாய் சுவைத்தவளே/
முத்தமிழின் வடிவினிலே மூச்சாகி
திகந்தவளே/
திக்கெல்லாம் உன்னுருவம் திருவிழாக் காட்சியாக/
தேடியே அலையுதடி
திருட்டுபோன மகவையாக/
அன்பை விதைத்து நீ உறங்க/
ஆசைக் காதலை நான் பருக/
பாதுகாப்பு வேலிதனை பார்வையிலே இட்டதாரோ/
மனதில் ஓடும் காதல் நதி/
மாமனைத் தேடி விழி யசைக்க/
விண்மீனின் விழியாலே விவேகமாய் தேடுதடி/
அந்தாதி கவிதை
துள்ளி விளையாடும் செல்ல தேவதையே/
தேவதையே குடும்ப
சீதேவி மொட்டே/
மொட்டே மலர்வாய்
முழுநிலவு ஒளியே/
ஒளியே கற்பின்
உண்மை அணிச்சையே/
அணிச்சையே வாடா
அழகு செல்லமே/
செல்லமே சீதனக்
கல்வி மழையே/
மழையே பொழிந்து
மகிழ்வே தருமே/
தருமே நிதமே
தங்கமாய் மிளிருமே/
மெய் வடித்த சிற்பி
உடல்
வடித்த
உன்னத சிற்பியே❤
உள்ளத்தில்
ஓடும்
உண(ர்)வு நதியே💙
அன்பையும்
அறிவையும்
ஒன்றாய் கலந்தவரே💛
அழகாய்
ஆற்றுப்படுத்தும்
அற்புத ஆசானே💙
குறைகளை
கண்டால்
நிறைவாய் சொல்லி💗
மறைகளை
உணர்த்திய
மாபெரும் மாதாவே❤
கருவறையில்
கற்பித்த
கனகத்தின் சித்தமாய்💚
கண்டதும்
தந்த
முதல் முத்தமாய்💓
வார்த்தைகளில்
தவழும்
வடிவுத் தெய்வமே❤
வாழ்நாளில்
கிடைத்த
என் பொக்கிசமே💛
காலமெல்லாம்
களிப்போடு
வாழ்ந்திடவே💜
கனகமெனும்
சேயாய்
வாழ்த்துகிறேன்
💛தாயே💛
Subscribe to:
Posts (Atom)