ஈரொன்பது ஆண்டுகளுக்கு முன்பு
எங்களுக்கு இருந்தது தெம்பு
வைகறையில் தானெழும்பி
ஆசாரி மலையிலே நீராடி
அடியவர்கள் எல்லோரும்
பஜனை இசைத்த திங்களது
இராமர் பஜனை நாம் பாட
மாந்தர் மனதில் அலாரம் ஊத
சங்கு சேகண்டி சத்தித்திலே
சகலரும் விழித்து எழும்பினரே
ஆளுக்கொரு நாள் சொல்லி
அற்புதமாய் தேநீர் கலந்து
அனைத்து பஜனை சிறார்களுக்கும்
அன்பாய் பகிர்ந்த அழகிய மார்கழி
நல்வழியை காட்டியவர்கள்
நம்ம ஊரு பெரியவர்கள்
நாளும் கடைப்பிடிக்கிறார்கள்
நல்லமதி கொண்டோர்கள்
சீதம் என்பது என்னவென்று
சிறு வயதில் தெரியாதன்று
மார்கழி மாதம் என்றதுமே
மாயவன் நினைவே வந்ததன்று
கடவுள் மாதம் என்று சொல்லி
கருத்துரைத்த காலம் மாறி
கல்விச்சாலை மூடியதால்
விடியும்வரை துயிலும் காலமிது
0 comments:
Post a Comment