பொங்கிடு தமிழா



கதிரவனுக்கு நன்றி சொல்ல
களிப்புடன் பொங்கிடு
இனிமையுடன் வாழ்வை தொடர
இன்முகத்துடன் பொங்கிடு
பழையன பதுங்கி இருக்க
பாசத்துடன் பொங்கிடு
தமிழ் மொழியாம் செம்மொழி
தலை நிமிர்த்த பொங்கிடு
உண்டி தந்த உழவர் குழாம்
உவகை அடைந்திட பொங்கிடு
புதுப்பானையில் அரிசி இட்டு
சக்கரையும் அளவாய் போட்டு
அக்கறையுடன் அக்கினி மூட்டு
அதிலே நம்மினத்தின் சிறப்பைக் காட்டு
நன்றி கெட்ட மனிதன் அறியா
நல்வினையை எடுத்துக்காட்டு
அகல் விளக்கை ஏற்றி இங்கே
ஆத்திரத்தை விரட்டியடி
ஆண்டுதோறும் பொங்கிடும் நீயோ
அகதிகளற்ற தேசத்தில் பொங்கிடு
பொங்கிடு தமிழா பொங்கிடு
பூர்வீகம் பூரிப்படைய பொங்கிடு
மறவாமல் பொங்கிடு மாதாவே
மங்களம் முழங்க பொங்கிடு
உரிமையை பெற்றெடுக்க
உடனே பொங்கிடு
உத்தமனாய் உலகில் மிளிர
ஒய்யாரமாய் பொங்கிடு

0 comments:

Post a Comment