ஆத்துமேட்டு ஆலமரம்
அடியினிலே களுங்கடியான்/
ஊருமக்கள காத்திடவே
ஒத்தயாக காவலிருப்பான்/
பள்ளிக்கால பருவத்திலே
துள்ளி நாங்க வந்ததுமே/
வாதுல தொங்கி ஆடிடவே
வசதியாக எமக்கு இருந்ததுவே/
ஆடிப்பாடி முடிஞ்சதுமே
அடிவயிற பசி கிள்ளியதும்/
காய்ச்சிருந்த ஆலம்பழம்
கனிவா பசி போக்கியதே/
எங்க ஊரு ஆலமரம்
எல்லோர் மனசிலும் வாழும்மரம்/
எல்லையில்லா இன்போம் தந்து
எப்போதும் நிழல் பரப்பும் மரம்/
ஒத்தயா நாங்க போனாலும்
ஒட்டுமொத்தமா ஆடிப் பாடினாலும்/
பெத்த புள்ளகல போல எம்மை
பேதமின்றி ஆதரிக்கும் மரம்/