ஆத்மேட்டு ஆலமரம்


ஆத்துமேட்டு ஆலமரம்
அடியினிலே களுங்கடியான்/
ஊருமக்கள காத்திடவே
ஒத்தயாக காவலிருப்பான்/
பள்ளிக்கால பருவத்திலே
துள்ளி நாங்க வந்ததுமே/
வாதுல தொங்கி ஆடிடவே
வசதியாக எமக்கு இருந்ததுவே/

ஆடிப்பாடி முடிஞ்சதுமே
அடிவயிற பசி கிள்ளியதும்/
காய்ச்சிருந்த ஆலம்பழம்
    கனிவா பசி போக்கியதே/
எங்க ஊரு ஆலமரம்
   எல்லோர் மனசிலும் வாழும்மரம்/
எல்லையில்லா இன்போம் தந்து
  எப்போதும்  நிழல் பரப்பும் மரம்/

ஒத்தயா நாங்க போனாலும்
ஒட்டுமொத்தமா ஆடிப் பாடினாலும்/
பெத்த புள்ளகல போல எம்மை
     பேதமின்றி  ஆதரிக்கும் மரம்/




0 comments:

Post a Comment